ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள், ஹீரோயின்களின் வருகைக்கு நிகராக இசை அமைப்பாளர்களின் வருகையும் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தனித்து தெரிந்து நிலைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நம்பிக்கையூட்டும் நல்வரவாக வந்திருக்கிறார் சி.எஸ்.சாம். மெல்லிசை படத்தின் இசை அமைப்பாளர். அண்மையில் நடந்த மெல்லிசை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல்களை கேட்ட சிறப்பு விருந்தினர்கள் சாமை வெகுவாக பாராட்டினார்கள்.
"சொந்த ஊர் மூணார். சிறுவயதிலிருந்தே இசை ஆர்வம் அதிகம். என்றாலும் படித்து முடித்து சாப்ட்வேர் துறையில் பொறியாளராக வேலை செய்தேன். இசை ஆர்வம் குறையாததால் இசை ஆல்பங்கள், விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். மெல்லிசை படத்துக்கு இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இசை அமைப்பாளர் தேடுவதாக கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். "இது இசை தொடர்பான படம் அதனால் இளையராஜா, ரகுமான் மாதிரி அனுபவ இசை அமைப்பாளரைத் தேடுகிறோம்" என்றார்.
நான் உருவாக்கி வைத்திருந்த சில மெட்டுகளை போட்டுக் காட்டினேன். அவர் சில பாடல் சூழல்களை சொன்னார் அதற்கு நான் இசை அமைத்துக் கொடுத்தேன் அது அவருக்கு பிடித்துவிடவே வாய்ப்பு கொடுத்தார். அனைத்து பாடல்களையுமே லைவ் ஆர்க்கெஸ்ட்ரா கொண்டு இசை அமைத்திருக்கிறேன். ஹரிகரன், ஷ்ரேயா கோஷ், ஹரினி, ஸ்ரீனிவாஸ், ஆண்ட்ரியா, ஹரிசரண் போன்ற முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்க்ள. மெல்லிசை படம் மூலம் என் திரையிசைப் பயணம் தொடரும் என்று நம்புகிறேன். என்கிறார் சாம்.