டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த 'நானும் ரௌடிதான்' படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. கடந்த நான்கு நாட்களிலேயே இந்தப் படத்தின் வசூல் 10 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வெற்றி தனுஷையும், விஜய் சேதுபதியையும் மீண்டும் இணைத்துவிட்டது. விரைவில் தனுஷ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். இது பற்றி தனுஷே நேற்று அறிவித்துவிட்டார்.
“உன்டர்பார் பிலிம்ஸுக்காக 'நம்ம ரவுடி' விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என நேற்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் இதற்கு முன் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக “எதிர் நீச்சல், காக்கி சட்டை'' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனின் போட்டியாளராகக் கருதப்படும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் இரண்டாவது படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்தச் செய்தி திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது நாள் வரை சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து அவரை தன்னுடன் நெருக்கமாக வைத்திருந்த தனுஷ் தற்போது விஜய் சேதுபதிக்கு அந்த இடத்தைக் கொடுத்து விட்டாரோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைத்து தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுகிறாரே என கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.