தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அஜித் நல்ல உடல்நலத்துடன் இருந்துவரும் நிலையி்ல், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்தி்ரா கூறியுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் அஜித் பற்றி வதந்தி பரவியது. மாரடைப்பு ஏற்பட்டு அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக பிரார்த்தியுங்கள் என அவரது மேனேஜர் இணையதள பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டது போன்று தகவல் அமைந்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அஜித் மேனேஜரிடம் கேட்டபோது,யாரோ சிலர் போட்டோஷாப் மூலம் எனது இணைய தள பக்கத்தை உருவாக்கி இதுபோல் வதந்திகள் பரப்பி உள்ளனர். அதை நம்ப வேண்டாம் என்றார். அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்" என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.