தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வதைப் போல 20 வருடங்களுக்கு முன்னால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். தியேட்டர்களில் பேனர்கள் கட்டுவது, போஸ்டர்கள் ஒட்டுவது என இருவரது ரசிகர்களுமே ஆர்பாட்டமான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அந்த தீவிரமான மோதல் இந்தக் காலத்தில் கொஞ்சம் குறைந்து விட்டாலும், சமூக வலைத்தளங்கள் இருப்பதால் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றன.
நேற்று திடீரென சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்களின் இரு படங்களைப் பற்றி நிறையவே விவாதித்துக் கொண்டார்கள். ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம், கமல்ஹாசன் நடித்த 'குருதிப்புனல்' திரைப்படம் இரண்டும் வெளிவந்து நேற்றோடு 20 ஆண்டுகள் ஆனது. இதில் 'முத்து' படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், தரமான படம் என்ற பெயரை 'குருதிப் புனல்' பெற்றது.
இரண்டு படங்களையும் அவர்களது ரசிகர்கள் 20 ஆண்டுகள் கழித்து அந்த அளவிற்கு கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இரண்டு படங்களுமே சொந்தச் சரக்கு இல்லை. 'முத்து' படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'தேன்மாவின் கொம்பத்து' படத்தின் ரீமேக் என்றால், 'குருதிப் புனல்' படம் ஹிந்தியில் வெளிவந்த 'துரோக்கால்' படத்தின் ரீமேக் ஆகும். 'முத்து' படம் ஒரு சராசரியான கமர்ஷியல் படம்தான் என்றாலும் ரஜினிகாந்த்தின் இரு வேட நடிப்பால் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. 'குருதிப் புனல்' படம் கமல்ஹாசன் நடித்த சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் நடிப்புக்காகவே இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
20 வருடங்கள் ஆனாலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்கள் அந்த இரண்டு படங்களையும் நேற்று ஞாபகப்படுத்திக் கொண்டாடியது ஆச்சரியமான நிகழ்வுதான்.