இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
"நாடோடிகள்" படத்திற்கு அடுத்தபடியாக டைரக்டர் சமுத்திரகனி, "போராளி" என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுப்ரமணியபுரம் சசிகுமாரின் நண்பரும், நடிகரும், இயக்குநருமானவர் சமுத்திரகனி. "சுப்ரமணியபுரம்" படத்தில் சமுத்திரகனியை நடிக்க வைத்தார் சசி, அதேபோல் "நாடோடிகள்" படத்தில் சசிகுமாரை நடிக்க வைத்தார் சமுத்திரகனி. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றியை தனது அடுத்த படத்திலும் கொடுக்க நினைத்தார் சசி. அதன்படி தன்னுடைய "ஈசன்" படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்தார் சமுத்திரகனி. இப்போது மீண்டும் சமுத்திரகனி "போராளி" என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சுவாதி, அபிநாயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்காடித்தெரு புகழ் அஞ்சலி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.