'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற, விக்ரம் அப்படியே மம்முட்டி வீட்டிற்கு சென்று மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காதபோது, மலையாளத்தில் நடித்து வந்த விக்ரமுக்கு தனது பல படங்களில் வாய்ப்புகள் கொடுத்து ஆதரித்தவர் மம்முட்டி என்பதால் அவர் மீது விக்ரமிற்கு தனி மரியாதையும் அன்பு உண்டு.. அதேசமயம் விக்ரமிற்கு இன்னொரு நெருங்கிய சொந்தமும் கேரளாவில் இருக்கிறது.. அது வேறு யாருமில்லை.. நடிகை காவ்யா மாதவன் தான்.
பதினைந்து வருடங்களுக்கு முன் தமிழில் 'காசி' படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தபோது ஏற்பட்ட சகோதர பந்தம் இது. கேரளாவுக்கு போகும்போதெல்லாம் முடிந்தவரை ஒரு நடை காவ்யா மாதவனின் வீட்டுக்கும் விசிட் அடுத்து விடுவார் விக்ரம்.. அதேபோல விக்ரம் கேரளாவுக்கு வந்த தகவல் தெரிந்தால், “அண்ணா ப்ளீஸ்.. வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுவிட்டு போங்கண்ணா” என உடனே போன் போட்டுவிடுவாராம் காவ்யா மாதவன். தன்னால் வரமுடியவில்லை என்றால், “ஸாரிம்மா.. இன்னைக்கு ஒருநாள் வேலையாத்தான் வந்திருக்கிறேன்.. இன்னொருநாள் வரேன்மா” என சொல்லிவிடுவாராம் விக்ரம்..