தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரியசகி, ப்ரியமானவளே, என் இனிய தோழியே, சுந்தரகாண்டம் என பல தொடர்களில் பிசியாக நடித்து வருபவர் நிலானி. சில படங்களிலும் நடித்திருந்தபோதும், சின்னத்திரைதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டு பெண்களிடமும் என்னை கொண்டு சேர்த்தது. அந்தவகையில் இப்போது நானும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவராக இருக்கிறேன் என்கிறார் நிலானி.
சின்னத்திரையில் தான் நடித்த கேரக்டர்கள் பற்றி அவர் கூறும்போது,
சீரியல்களைப் பொறுத்தவரை நான் என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளவில்லை. எந்தமாதிரியான கேரக்டர் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமே. அந்த வகையில், பாசிட்டீவ், நெகடீவ், போலீஸ் என பலதரப்பட்ட வேடங்களில் இதுவரை நடித்து விட்டேன். என்றபோதும் நான் வில்லியாக நடித்த வேடங்கள்தான் பெரிய அளவில் என்னை நேயர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதற்கு காரணம் அந்த வேடங்களில் நான் அதிரடியான பர்பாமென்ஸ் கொடுத்தேன். அதற்கு அந்த வேடங்களில் நிறைய வாய்ப்பும் இருந்தது. அதோடு, எனது உயரம், உருவத்தைப்பார்த்து என்னை அதிகமாக வில்லி வேடங்களுக்கே நடிக்க அழைக்கிறார்கள். அதனால் வில்லி வேடம் என்றால் கூப்பிடு நிலானியை என்றாகி விட்டது.
அதேசமயம், எனக்கு போலீஸ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. சுந்தரகாண்டம் தொடரில் போலீஸ் ஐஜியாக நடிக்கிறேன். கடமையிலும், குடும்பத்திலும் அதிக பொறுப்புடன் நடிக்க வேண்டிய வெயிட்டான ரோல். இந்த வேடம்தான் இதுவரை நான் நடித்ததில் எனக்கு மனதளவில் திருப்தி கொடுத்துள்ளது. அதனால் இதுபோன்று இன்னும் நிறைய போலீஸ் வேடங்களில், சமூகசேவை செய்யும் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இப்படி சொல்லும் நிலானியிடம், சமீபகாலமாக சீரியல்களில் ஆபாசம் நிறைந்த காட்சிகளும் இடம்பெற்று வருகிறதே? இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்று கேட்டபோது,
தமிழ் சீரியல்கள் எப்போதுமே கலாச்சாரத்துக்கு உட்பட்டுதான் இருக்கும். வடஇந்தியாவில் இருந்து வரும் சீரியல்கள் வேண்டுமானால் நீங்கள் சொல்வதைப்போன்று இருக்கலாம். மேலும், சில சமயங்களில் ஒரு தவறான வில்லியைப்பற்றி குறிப்பிடும்போது, அவளுடைய தவறான நடத்தைகளையும் காண்பிக்க வேண்டும். அப்போது வேண்டுமானால் தவிர்க்க முடியாத காரணத்தினால் சற்று ஆபாசம் இருக்கலாம். தவறானவர்களின் தவறை சொல்லித்தான் அவர்களை திருத்த முடியும் என்பதால் சிலசமயங்களில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. ஆனால் அதுவும் தமிழ் சீரியல்களில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்னத்திரை ஒவ்வொரு வீடுகளின் வரவேற்பறைக்கே செல்வதால், அதை உணர்ந்தே கதையும், காட்சியும் அமைக்கிறார்கள் டைரக்டர்கள்.
அப்படியென்றால் சின்னத்திரைக்கு சென்சார்போர்டு தேவையில்லையா?
கண்டிப்பாக தமிழ் சீரியல்களுக்கு சென்சார்போர்டு தேவையில்லை என்பதே எனது கருத்து. காரணம், குடும்ப சூழலில் உருவாகும் கதைகளே சீரியல்களாகி வருவதால் அதற்கு அவசியம் இல்லை. அதோடு வசனங்களில்கூட இரட்டை அர்த்தமோ, ஆபாசமோ இல்லாத வார்த்தைகளே இடம்பெறுகிறது. இந்த விசயத்தில் தமிழ் சீரியல் டைரக்டர்கள் ரொம்ப கவனமாக இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் டிவித் தொடர்கள் ஆரோக்யமானதாக இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்கிறார் நிலானி.