ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன் தம்பி கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் முன்பு இருந்தவர்களை போல கடமைகளை உதவியாக செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த தேர்தல் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் வருந்தத்தக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக்கும்போது செய்த கடமைகள் உதவிகளாக சித்தரிக்கப்பட்டன. நடிகர்கள் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது பண்பு மறந்து வார்த்தை தடித்து அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழ்நிலை இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.
வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு சக கலைஞனாக எனது வேண்டுகோள் இவை. கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள், பகைமையை விரட்டி ஒற்றுமைக்கு வித்திடுங்கள், சக கலைஞர்கள உங்கள் மீது வைத்திருக்கும், நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே உங்களின் உண்மையான வெற்றி நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி. இவ்வாறு சூர்யா கடிதத்தில் எழுதியுள்ளார்.