சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
அசல் படத்துக்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சரண் தயாரித்து இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர். வினய்யுடன் புதுமுகங்கள் சமுத்ரிகா, ஸ்வஸ்திகா, நடித்துள்ளனர், பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், கிருஷ்ண ரமணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் மூவி பேக்கடரியும், சங்கர் கே. பிரவீன் பிலிம்சும் இணைந்து தயாரித்துள்ளது.சுமார் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. வருகிற தீபாளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதில் வினய், 2 வேடங்களில் நடித்திருக்கிறார். திருநெல்வேலி கிராமத்து இளைஞனாகவும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் மார்டன் இளைஞனாகவும் நடித்திருக்கிறார். திருநெல்வேலி, ஐதராபாத், பாங்காக், துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கு எண் படத்தில் பணக்கார பெண்ணாக அதாவது வில்லியாக நடித்திருந்த ரித்திகா சீனிவாசன் இதிலும் வில்லியாக நடித்திருக்கிறார். பிரதீப் ராவத், மயில்சாமி, இளவரசு, சனா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.