பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஒரு பொதுத் தேர்தலுக்கான பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தபோது ஓசைப்படாமல் இன்னொன்றும் நடந்தது. அது சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவதில் உயர்நீதி மன்றம் காட்டும் தீவிரமும். தமிழக அரசு காட்டும் ஆர்வமும்தான். அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் அந்த மணி மண்டபத்தில் கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மணிமண்டபம் கட்ட 2 ஆண்டுகள் ஆகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் சிலை அகற்றப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றமும் கெடுவிதித்துள்ளது.
அதன்படி சிலை அகற்றப்பட்டால் மணிமண்டபம் கட்டும்வரை சிலை எங்கே வைக்கப்படும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மெரீனா பீச்சில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டு அரசு அருங்காட்சியக குடோனில் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப்போல சிவாஜி சிலையும் போட்டு வைக்கப்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு அணியின் தேர்தல் அறிக்கையிலும் சிவாஜி சிலை குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. இதில் அரசு தலையீடு இருப்பதால் எதையாவது சொல்லி அரசின் கோபத்துக்கு ஆளாக இரு அணிகளுமே விரும்பவில்லை என்று தெரிகிறது.
சட்டசபையில் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களுமே நடைமுறைக்கு வந்துவிடுவதில்லை. அதுபோலவே சிவாஜி மணிமண்டமும் கிடப்பில் போடப்படலாம். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வேறு கட்சி ஆட்சிக்கு வருமானால் அந்த கட்சி முந்தைய ஆளும்கட்சியின் திட்டத்தை நிறைவேற்றும் என்று கூறுவதற்கில்லை.
சென்னையில் பொது இடங்களில் திரைப்படம் சார்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கவியரசர் கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி ஆகியோருக்கு சிலை இருக்கிறது. இதில் சிவாஜி சிலை தவிர மற்ற சிலைகளுக்கு அவர்களது பிறந்த நாள், நினைவு நாளின் போது அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். சிவாஜி சிலைக்கு அவ்வாறு செய்வதில்லை. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்கூட செய்வதில்லை. இந்த முறை நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்ததால் விஷால் அணியினரும், சரத் அணியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மற்ற ஆண்டுகளில் சிவாஜி குடும்பத்தினரும், சிவாஜி ரசிகர் மன்றத்தினரும் மட்டுமே இந்த மரியாதையை செய்வார்கள்.
தலைவர்களுக்கு, கலைஞர்களுக்கு சிலை வைப்பதும், மணிமண்டபம் கட்டுவதும் மரணத்திற்கு பிறகும் அவர்களுக்கு மரியாதை செய்வதற்குத்தான். சிவாஜிக்கு மரியாதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யமலாவது இருக்கலாமே. அதற்கு ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும். அப்போதுதான் அரசு இடம் ஒதுக்கி கொடுத்தும் கடந்த 10 வருடமாக நடிகர் சங்கம் ஒரு செங்கலைகூட எடுத்து வைக்காத பாவத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.