ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா தற்சமயம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றார். மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை மீனா வேடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஸ்ரேயா நடித்தார். இந்நிலையில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ரேயாவிற்கு அழைப்பு வந்துள்ளதாம். பாகுபலி தி கன்குலூசன் என்ற பெயரில் இயக்குனர் ராஜமௌலி இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளன. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த ராணாவின் மனைவியாக நடிக்க ஸ்ரேயாவிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். பாகுபலி படத்தில் வில்லியாக நடிக்க ஸ்ரேயாவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். நடிகர் வெங்கடேஷிற்கு ஜோடியாக கோபாலா கோபாலா படமே ஸ்ரேயா இறுதியாக நடித்த தெலுங்கு திரைப்படமாகும். இப்படத்திற்கு பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்காத ஸ்ரேயா பாகுபலி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.