'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் வருடந்தோறும் மலையாள சினிமாவின் மோஸ்ட் சென்சேஷனல் செலிபிரட்டி யார் என்கிற சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் யார் என சர்வே எடுப்பது ஒருவிதம்.. ஆனால் விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரபலங்கள் என்கிற அடிப்படையில் இந்த சர்வே வருடந்தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2015-ன் மலையாள சினிமாவின் மோஸ்ட் சென்சேஷனல் செலிபிரட்டியாக முதல் இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நடிகர் ஜெயசூர்யா..
கடந்தவருடம் முதல் இடத்தில் இருந்த மோகன்லால் இந்தமுறை நான்கவாது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் நிவின்பாலியும் மூன்றாவது இடத்தில் மம்முட்டியும் இடம்பிடித்துள்ளனர். கடந்தவருடம் மம்முட்டி பத்தாம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது இடம் ரீமா கல்லிங்கலுக்கு கிடைத்துள்ளது. அதேபோல இந்த சர்வேயின்படி தமிழில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் நடிகை அமலாபால். அடுத்த இடம் ஆர்யாவுக்கு. பாலிவுட்டை பொறுத்தவரை பிரியங்கா சோப்ரா, ஷ்ரதா கபூர், கபில் சர்மா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் வரிசையாக நான்கு இடங்களை பிடித்துள்ளனர்.