மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பெயர்தான் மலையாள சினிமா.. ஆனால் கமர்ஷியல் படங்கள் அனைத்திலும் பத்தில் இருந்து முப்பது சதவீதமத்திற்கு குறையாமல் தமிழ் வசனங்களோ அல்லது தமிழ் நடிகர்களை பற்றிய காட்சிகளோ இல்லாமல் மலையாள சினிமா வெளியாவதில்லை.. மலையாள படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகத்தெரியும். அந்த வகையில் மலையாள நடிகரும், பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் 'தளபதி' என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறிய சுவாரஸ்யமான நிகழ்வை ஒரு படத்தில் காட்சியாக வைத்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவரும் ஹீரோக்களாக நடித்திருகிறார்கள். இதில் அந்தோணியாக நடித்துள்ள இந்திரஜித் கதைப்படி, ஒரு சினிமா தியேட்டரில் ரஜினி நடித்த 'தளபதி' படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது தியேட்டரிலேயே பிறந்தவராம். அதனால் அவரை பிருத்விராஜ் உட்பட அனைவரும் அவரை தளபதி என்றே அழைப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தளபதி படத்தில் இருந்து ரஜினியின் கிளிப்பிங் கட்சிகளும் பின்னணியில் சிறிது நேரம் காட்டப்படுகிறது. இத்தனைக்கும் அந்தப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தாலும் கூட அவரை பற்றிய பேச்சும் காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.