பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சென்னை : எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக, விறுவிறுப்பாக நடந்து முடிந்து இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல். இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. விரைவில் இந்த அணியினர் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் விஷாலின் பாண்டவர் அணியினர் அனைவரும் ஒன்றாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு அனைவரும் ஒன்றாக கூடி வெற்றி சின்னத்தை காண்பித்தபடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர்.... நாங்கள் எதற்காக ஒன்றாக சேர்ந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். காணாமல் போன நடிகர் சங்க முகவரியை மீட்டுள்ளோம். இங்கிருந்து எங்களது பணி துவங்கியுள்ளது. பொலிவு இழந்து காணப்படும் இந்த வளாகத்தை மீண்டும் உயிர்பித்து சிறப்பாக்குவோம். வெற்றி என்பதை விட ஒரு பொறுப்பு என்று சுமையை ஏந்தி உள்ளோம். தேர்தல் அறிக்கையில் சொன்னதை கண்டிப்பாக செய்வோம்.
தேர்தலில் இரு அணியினர் போட்டியிட்டதை பிளவு என்று கூற முடியாது. எங்களுக்குள் எந்த பிளவும் கிடையாது. புதிய கலைஞர்களை கண்டறிந்து அவர்களின் தேவையை கண்டறிவோம்.
இவ்வாறு நாசர் கூறினார்.
விஜயகாந்த் வாழ்த்து : நடிகர் நாசர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த், நாசருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார்.