தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான விஷாலின் பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாசர்... தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான ஒரு மிகப்பெரிய நிகழ்வு, இந்த நடிகர் சங்கம் தேர்தல். இது யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக நடந்த நிகழ்வு அல்ல. ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம், அது நடந்துள்ளது. கடந்த நிர்வாகத்தை பற்றி எந்த குறையும் கூற விரும்பவில்லை, இங்கிருந்து எங்களது பயணம் தொடங்குகிறது, எங்களுக்கான பணிகள் அதிகமாக இருக்கிறது.
தேர்தல் முடிவுக்கு பின்னர் சரத்குமாரை நான் சந்தித்தேன். சரத்குமார் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். உங்களது ஆதரவு வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு ஏதேதோ பேசியிருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை, நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம். தேர்தல் சிறப்பாக நடத்த உதவிய தமிழக முதல்வருக்கும், காவல் துறைக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நாசர் கூறினார்.
விஷால் பேசும்போது... நடிகர் சங்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று செயல்பட்ட அனைவருக்கும் நன்றி. நாசரின் 18 ஆண்டுகால கனவு நிறைவேறியிருக்கிறது. தேர்தலை சிறப்பாக நடத்தி தர உதவிய முதல்வர் ஜெயலலிதா, போலீசார் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி என்று கூறினார்.