ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுவதற்கான முக்கிய காரணமே நடிகர் சங்கக் கட்டிடம்தான். சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம் நடிகர் சங்க நிலத்தை 'லீஸ்' அடிப்படையில் தனியார் திரையரங்க நிறுவனத்திற்குக் கொடுத்ததைத் எதிர்த்துதான் விஷால் அணி உருவானது. அதன் பிறகே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர்கள் எடுத்தனர். இந்தத் தேர்தலே தரை மட்டமாகியுள்ள நடிகர் சங்கத்தின் கட்டிடத்தையும், அந்த இடத்தில் நடிகர் சங்கத்திற்கென புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதைப் பொறுத்தும்தான் நடந்து வருகிறது.
ஆனால், அது பற்றியெல்லாம் எதுவும் சொல்லாமல் நடிகர் சங்கத்திற்கு பெயரை மாற்ற வேண்டும் என்ற ஒரு விஷயத்தை ரஜினி காலையில் சொன்னார். அதன் பிறகு நடிகர் சங்கக் கட்டிடம் பிரச்சனை மறைந்து போய் தற்போது ரஜினி சொன்ன பெயர் மாற்றம் பற்றியே செய்திகள் சுற்றி வருகின்றன. எப்போதுமே ரஜினி ஒரு கருத்தைச் சொன்னால், அது பற்றியே ஊடகங்கள் பரபரப்பாகப் பேசி வருவது வழக்கமாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் பெயர் மாற்றம் பற்றி பேசியிருப்பது தற்போதைய முக்கிய பிரச்சனையை திசை திருப்புவதாகவே அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பெயர் மாற்றம் என்பது புதிதாக பதவியேற்க உள்ள பொதுக்குழு கூடி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம், அதை உடனே நிறைவேற்றுவது கடினம் என்றே தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.