தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணியினருக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று சரத்குமார் அணியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது. ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள விஷால் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், ராதாரவிக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை. வரம்பு மீறி பேசுவது அவர்கள் அறிக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ராதாரவியின் பேச்சை தடுப்பதற்கு அவர்கள் அணியில் ஆட்களே இல்லை. நாளைய தேர்தல் நல்ல மாறுதலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.