ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது அதே நடிகர் சங்கத்தால் தயாரிப்பாளர் சங்கத்திலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அக்., 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட உள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதனை அதன் தலைவர் தாணு தெரிவித்தார். ஆனால் தாணுவின் இந்த செயல் தனிப்பட்ட முடிவு என்றும், சங்க உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தாணு தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்துவிட்டார் என தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினரான ஏ.எல்.அழகப்பன் அறிக்கை வெளியிட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அப்போதே பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கே.இ.ஞானவேல் ராஜா தலைமையில், சென்னையில் அவசரமாக ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதில் தாணுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவரையோ அல்லது ஞானவேல் ராஜாவையே தலைவர் பதவிக்கு கொண்டு வரலாம் என்றும், இல்லையென்றால் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக விரைவில் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவால் தாணுவின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.