ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அஞ்சலி படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது மற்றும் தமிழ்நாடு அரசு விருதினை பெற்றவர் பேபி ஷாம்லி. அதன்பிறகு துர்கா, செந்தூரதேவி என தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்தவர், குமரியான பிறகு ஓய் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்திற்கு பிறகு அக்கா ஷாலினி இடத்தை ஷாம்லி நிரப்புவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் தோல்வியடையவே அடுத்தபடியாக ஷாம்லிக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதனால் படிப்பை தொடருவதற்காக வெளிநாடு சென்று விட்டார்.
இப்போது மறுபடியும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் ஷாம்லி. தமிழில், விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி படத்தில் நடிப்பவர், தெலுங்கில் கதலோ ராஜகுமாரி என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். ஷாம்லியை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் ஹிட் கொடுத்தவருக்கு ஹீரோயின் ஆனபிறகு முதல் படமே தோல்வியடைந்து அவரை ராசியில்லாத நடிகையாக்கி விட்டது. அதனால் இப்போது ரீ-என்ட்ரியாகியிருக்கும் ஷாம்லி, அந்த செண்டிமென்டை உடைத்தெறிந்து விட்டு ராசியான நடிகை என்கிற பெயரை பெற வேண்டும் என்று இந்த படத்தின் கதை மீது அதிக நம்பிக்கை வைத்து நடித்து வருகிறார்.
அதோடு, கதைக்காக சில காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சொன்னால் அதற்கு உடன்படுவதில்லை. என் அக்கா ஷாலினியின் பாணியைதான் நானும் கடைபிடிக்கிறேன். அதனால் பர்பாமென்சுக்காக மட்டுமே என்னைத்தேடி வாருங்கள். கவர்ச்சிக்காக யாரும் வரவேண்டாம் என்றும் ஓப்பனாக சொல்லி விடுகிறார் ஷாம்லி.