இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு நடிகர் நடிக்க மறுத்த படத்தில் இன்னொரு நடிகர் நடிப்பதைப்போல், ஒரு இசையமைப்பாளர் இசையமைக்க மறுத்த படத்துக்கு இன்னொரு இசையமைப்பாளர் இசையமைப்பது ஒன்றம் தவறில்லை.
ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முதலானோர் நடித்துள்ள 'சில சமயங்களில்'படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொல்லப்பட்டது.
'காஞ்சிவரம்' படத்திற்கு பிறகு ப்ரியதர்சன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தை பிரபு தேவாவின் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
பிரபுதேவாவின் முதலீட்டில் லைன் புரட்யூசராக இருந்து இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபாலின் 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது.
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை அம்சம் கொண்ட இப்படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொன்னார்கள்.
ஏ.எல்.விஜய், ப்ரியதர்ஷன் இருவரும் அவரை சந்தித்து கதையை சொன்னார்கள்.
ஏனோ அவர் இசையமைக்க மறுத்துவிட்டாராம்.
எனவே அடுத்த சாய்ஸாக, இளையராஜாவை அணுகி உள்ளனர்.
'சில சமயங்களில்' படத்தை இளையாராஜாவுக்கு போட்டுக் காண்பித்துள்ளார் ப்ரியதர்சன்.
படத்தை பார்த்ததும் நெகிழ்ந்து போன இளையராஜா படத்தை பாராட்டியதோடு, இசை அமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.