ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா, மெளனகுரு படங்களுக்குப்பிறகு இனியாவுக்கு சரியான படவாய்ப்புகள் இல்லை. அப்போது அவர் கிளாமராக நடிக்காததுதான் இதற்கு காரணம் என்று சொன்னார்கள். அதனால் பின்னர் கண்பேசும் வார்த்தைகள் என்ற படத்தில் மிர்ச்சி செந்திலுடன் விரகதாப காட்சியில் கிளாமராக நடித்தார் இனியா. ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால், கதாநாயகி வாய்ப்புகளுக்காக காத்திருந்தவர் பின்னர் கேரக்டர் நடிகையாக ரூட்டை மாற்றி விட்டார். அந்த வகையில், இப்போது தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.
மேலும், கேரக்டர் ரோல்களில் மட்டுமே நடித்து பெரிதாக சம்பாதிக்க முடியாது என்பதால், இப்போது நடன நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார் இனியா. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே தனது சகோதரியுடன் சேர்ந்து கேரளாவில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்தான் இனியா. அதனால் இப்போது அதையே பெருசுபடுத்தி சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்பட பல நாடுகளில் நடத்தி வருகிறார். அப்படி செல்லும்போது தன்னுடன் சினிமா காமெடி நடிகர்கள் மற்றும், விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சிகளில் நடித்த கலைஞர்களையும் அழைத்து செல்கிறார் இனியா.
காரணம், தான் ஹிட்டான சினிமா பாடல்களுக்கு குழுவினருடன் நடனம் ஆடினபோதும், இடையிடையே அவர்களின் காமெடிகளையும் கலந்து நடத்துகிறாராம். இதனால் இனியாவின் நடன நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.