ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எங்கேயும் எப்போதும், ராஜா ராணி ஆகிய படங்களில் ஜெய் நடிப்புக்கு நல்ல
தீனி போட்ட படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படங்களில் அஞ்சலி, நயன்தாராவுடன் அவரது காம்பினேசன் பேசப்பட்டதோடு, அவரை தனது நடிப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த அப்படங்களின் டைரக்டர்கள் களம் அமைத்துக்கொடுத்தனர். அந்த படங்கள் கொடுத்த வெற்றிக்குப்பிறகு ப்ளேபாய் கதைகளை தவிர்த்து ஆக்சனுக்கு தாவினார் ஜெய்.
ஆனால், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் அவர் நடித்த வலியவன் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆக்சன் அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் மறுபடியும் தனது பாணிக்கே இறங்கி வந்து விட்ட ஜெய், இப்போது புகழ் படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். வலியவனுக்குப்பிறகு எடுக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி இப்போதுதான் எழுந்து வந்திருக்கிறது. இந்த படம் ஒரு விளையாட்டு மைதானத்துக்காக அரசியல்வாதியுடம் மோதும் வேடத்தில் நடிக்கிறார் ஜெய்.
அதோடு, வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த சென்னை 28 படத்தைப்போலவே விளையாட்டு மைதானத்தில் நடக்கும் கதை என்பதால். இன்றைய இளவட்ட ரசிகர்களை இந்த படம் பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கும் ஜெய், இந்த படத்தில் பெரிதாக மேக்கப் போடாமல ஒரு சராசரி இளைஞனாக இறங்கி நடித்திருக்கிறாராம். அதோடு, சுப்பிரமணியபுரத்தில் ஸ்வாதியுடன் நடித்தது போன்று இந்த படத்தில் சுரபியுடனான ரொமான்ஸ் காட்சிகள் அமைந்திருக்கிறதாம். அதனால் இந்த படம் எனக்கு இன்னொரு சென்னை -28 ஆகவோ, சுப்பிரமணியபுரமாகவோ அமைய வாய்ப்பிருக்கிறது என்று சினிமா நண்பர்களிடம் கூறி வருகிறார் ஜெய்.