பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீ டிவியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து, தங்களது அது இது எது நிகழ்ச்சியில் ஒரு ஷோ நடத்தியது விஜய் டிவி. குறிப்பாக, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி உச்சரிக்கும், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற வார்த்தை கிண்டல் செய்யும் விதத்தில் அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது. அது நேயர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
ஆனால் அது லட்சுமிராமகிருஷ்ணனை அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும், என்னை என்ன வேணும்னாலும் கலாய்ங்க. ஆனா நான் இருக்கிற சேனலைப் பற்றி எதுவும் பண்ணாதீங்க என்று அந்த சமயத்தில், அது இது எது நிகழ்ச்சியில் நடித்தவர்களிடம் கேட்டுக்கொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் ஒருகட்டத்தில் அந்த வார்த்தையை வைத்து அனைவருமே தன்னை கிண்டல் செய்யத் தொடங்கி விட்டதால் அப்செட்டில் இருந்தார் அவர்.
இந்த நிலையில், சமீபத்தில் வெர்சன்-2 என்ற பெயரில் மீண்டும் அதே நிகழ்ச்சியில் விஜய் டிவி தன்னை கலாய்த்ததால் இப்போது செம டென்சனாகி விட்டார் லட்சுமிராமகிருஷ்ணன். தன்னை அவமானப்படுத்தியதற்காக விஜய் டிவி மீது வழக்கு தொடரப்போவதாக சொன்னார். அதோடு தனது டுவிட்டரில் விஜய் டிவிக்கு எதிரான கமெண்ட்டுகளை தொடர்ந்து போட்டு வருகிறார்.
இந்த நிலையில், அந்த டிவி சம்பந்தப்பட்டவர்கள், யார் மனசையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை. அதனால்தான் நிகழ்ச்சிக்கு முன்பே பொறுப்பு துறப்பு என்ற வாசகத்தை போட்டு விட்டு ஒளிபரப்பு செய்கிறோம் என்று கூறியுள்ளனர். அதோடு, அந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு முதல்ல சந்தோசப்பட்ட லட்சுமிராமகிருஷ்ணன் இப்ப மட்டும் ஏன் கோப்படுறாங்கன்னு தெரியல என்று தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒருவரை தெரியாமல் காயப்படுத்தினால்தான் பொறுப்பு துறப்பு என்கிற வார்த்தையை பயன்படுத்த முடியும். வேண்டுமென்றே திரும்பத்திரும்ப காயப்படுத்துவதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்த முடியாது. மேலும், நான் ஏற்கனவே முதலில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியினால் மனதளவில் காயப்பட்டிருப்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் வேண்டுமென்றே வெர்சன்-2வை ஒளிபரப்பி என்னை மேலும் புண்படுத்தி விட்டீர்கள் என்று தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.