பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
திரையுலகில் நடிகர்களுக்குக் கிடைக்கும் பெயரும் புகழும் நடிகைகளுக்கு அவ்வளவாகக் கிடைப்பதில்லை. சினிமாவில் ஹீரோயிசம்தான் அதிகமாக இருக்கிறதே தவிர ஹீரோயினிசம் என்பது துளி கூட இல்லை. ஆனாலும், எப்போதோ ஒரு முறைதான் நாயகியை மையப்படுத்தும் படங்கள் வருகின்றன. தமிழ் சினிமாவில் இப்போதுதான் நாயகிகளும் கொஞ்சம் கொஞ்சமா தலை தூக்குகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த 'மாயா' படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருந்தது. இந்தப் படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து, தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாக உள்ள படமான 'ருத்ரமாதேவி' படமும் நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த படம்தான். இந்தப் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா தற்போது டோலிவுட்டில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அவற்றில் முக்கியமானது மூத்த இயக்குனரான தாசரி நாராயணராவின் பாராட்டு குறிப்பிட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
“அருந்ததி' படம் பார்த்த போது சிறப்பான நடிப்பைப் பார்த்தேன், ஆனால், அவரை சிறந்த நடிகை என்று நான் நினைக்கவில்லை. 'ருத்ரமாதேவி' படம் பார்த்த பிறகு எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகை. இத்தனை வருட திரையுலக வரலாற்றில் சாவித்ரி, ஜமுனா, வாணிஸ்ரீ, ஜெயசுதா, சுஜாதா ஆகியோர்தான் சிறந்த நடிகைகளாக இருந்தார்கள். அவர்களது வரிசையில் தற்போது அனுஷ்காவும் இடம் பெற்றுவிட்டார். ருத்ரமாதேவியில் அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்,” என அனுஷ்காவைப் பாராட்டியுள்ளார்.
தாசரி நாராயண ராவ் குறிப்பிட்டுள்ள அத்தனை நடிகைகளும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மொழிகளிலும் நாயகிகளை ரசிப்பதில் மட்டும் நமது ரசிகர்கள் பாரபட்சம் காட்டுவதில்லை போலிருக்கிறது.