வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பான 'கேன்செர்வ்'(CANSERVE) என்கிற தன்னார்வ அமைப்பு கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபேரணி ஒன்றை நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துடன் கலந்துகொண்டு இந்த பேரணியை துவக்கி வைத்தார் பிரேமம்' புகழ் நடிகை சாய் பல்லவி. இந்த நிறுவனம் தொடர்ந்து அடுத்ததாக வரும் நவம்பர் 14ஆம் தேதி எர்ணாகுளத்தில் மீண்டும் ஒரு பிரச்சார நிகழ்ச்சியை நடத்த உள்ளது.. இதில் மஞ்சு வாரியரும் ரீமா கல்லிங்கலும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
தற்போது ஆஷிக் அபு இயக்கத்தில் 'ராணி பத்மினி' என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ள இந்த இருவரும் இந்த கேன்செர்வ் அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சிக்கு வருகைதர சம்மதித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான். அதாவது கேன்சர் சிகிச்சையின் ஒருபாகமாக மேற்கொள்ளப்படும் கீமோதெரபியின்போது முடிகொட்டும் நோயாளிகளுக்கு விக் வழங்க இருக்கிறார்கள். அதற்கு தேவைப்படும் முடியினை தானம் தருவதுதான் இந்த பிரச்சாரத்தின் நோக்கம். வரும் நவம்பர் 14ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் காலை 11மணிக்கு துவங்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நிறையபேர் வந்து ஆதரவு தரவேண்டும் என்பதால் தான், இந்த 'ராணி-பத்மினி' இருவரும் அதை ஊக்கப்படுத்தும் விதமாக வருகைதர சம்மதித்துள்ளனர்.