ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.கே.கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது, நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விலைபோவதை ஏற்க முடியவில்லை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகள் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என்று பேசினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தார்கள். இம்மனு விசாரணைக்கு உகந்ததுதான். ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம் என உத்தரவிட்டனர்.