12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
கிராம மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வி.எம்.வினு இயக்கத்தில் 2013ல் வெளியான 'பாலேட்டன்' படத்தில், மோகன்லாலின் கேரக்டரே ஊருக்குள் யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடனே கிளம்பிவிடுவதுதான். அதுமட்டுமல்ல அவர்களுக்காக கைக்காசையும் செலவு செய்து போதாததற்கு கடன் வாங்கியும் உதவி செய்து வீட்டில் அம்மா, மனைவியிடம் வாங்கி கட்டிக்கொள்வார். ஆனால் இதுவரை அவர் கிராமத்தில் உள்ள பதவிகளை கேரக்டர்களாக ஏற்று நடித்ததாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
ஆனால் தற்போது இயக்குனர் ஜிபு ஜேக்கப் மோகன்லாலை வைத்து தான் இயக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு பஞ்சாயத்து செகரட்டரி கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்க்கவுள்ளார். இதற்குமுன் ஜிபு ஜேக்கப், தனது முந்தைய படமான 'வெள்ளிமூங்கா'விலும் கதாநாயகன் பிஜுமேனனுக்கு உள்ளூர் அரசியல்வாதி வேடம் தான் தந்திருந்தார். இந்த புதிய படத்தில் பஞ்சாயத்து செகரட்டரியான மோகன்லாலுக்கும் கிராமத்து மக்களுக்கும் ஏற்படும் சுவையான, கசப்பான, சிக்கலான அனுபவங்களின் கலவையாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ள கதாசிரியர் சிந்துராஜ். வி.ஜெ.தாமஸ் என்பவர் எழுதிய 'பிரணயோபனிஷத்' என்கிற சிறுகதையை தழுவி இதன் கதை உருவாக்கப்படுகிரதாம். வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.