'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். விஷால் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் போட்டியிடும் தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஆதரவளிக்கும் 40 ஹீரோக்களையும் கொண்டு வந்து நிறுத்தினார். அதன் பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டச் சென்று விட்டார்.
சரத்குமார் அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கடந்த 11ந் தேதி அதே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் மனோராமா ஆச்சி மறைந்து விட்டதால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அந்த கூட்டத்தை வருகிற 16ந் தேதி தனது வேட்பாளர்களை சரத்குமார் அறிமுகப்படுத்துகிறார். அன்றைய தினம் தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் பெரும் கூட்டத்தை கூட்டிக்காட்ட சரத்குமார் ஆதரவாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக ராதிகா தன்னுடன் நடித்த, தனக்கு தெரிந்த அத்தனை நடிகர்கள் வீட்டுக்கும் நேரடியாக சென்ற வாக்கு சேகரித்து வருகிறார்.
இதற்கிடையில் நாளை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சரத்குமார். அப்போது பல முக்கிய அதிரடி தகவல்களை அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. என் மீது பழிசுமத்தினால் பல ரகசியங்களை வெளியிடுவேன் என்று முன்பு அவர் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.