‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பெங்களூர் வாழ் தமிழரான கே.கணேசன் என்பவர் அங்கு 4 கன்னட படங்களை இயக்கியுள்ளார். தமிழில் போர்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கி உள்ளார். குருநாத் சல்சானி என்பவர் தயாரித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தன்யா, நாகி நீடு, ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இலங்கையில் நடந்த இறுதிபோரில் கொல்லப்பட்ட விடுதலைபுலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை கதை. இந்தப் படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் தர மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து இயக்குனர் கே.கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மனுவில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: இலங்கையில் நடந்த இறுதிப் போரில் தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்டது. இதில் இசை பிரியா என்ற பத்திரிகையாளர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது. இதையடுத்து நான் போர்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கினேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பித்தேன்.
படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜெயந்தி என்பவர் "இது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான படம். முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை தேவையில்லாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்" என்றார். இன்னொரு உறுப்பினரான எஸ்.வி.சேகர் "இசைப்பிரியா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா--?" என்று கேட்டார். சேனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியும் அவர் ஏற்கவில்லை. "இங்கு திரையிட அனுமதி தரமுடியாது வெளிநாட்டு தமிழர்களுக்கு போட்டு காட்டுங்கள்" என்று கூறிவிட்டார். இறுதியில் என் படத்துக்க தணிக்கை சான்றிதழ் தரமுடியாது என்று தணிக்கை குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கூறியிருக்கிறார்.
மெட்ராஸ் கபே, புலிப்பார்வை போன்ற படங்களுக்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கும் நிலையில் இந்த படத்துக்கு மறுத்தது ஏன் என்கிற விளக்கத்துடனும், அந்த படங்களை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களின் விபரங்களுடனும் தணிக்கை குழு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.