தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை சினேகாவுக்கு நேற்று பிறந்த நாள். வழக்கமாக தனது பிறந்த நாளை ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ள முதியவர்கள், குழந்தைகளுடன் கொண்டாடுவது அவர் வழக்கம். இந்த முறை அவர் ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்ட நிலையில் நேற்று குழந்தைகள் இல்லத்துக்கு சென்றவர் கதறி அழும் நெகிழ்ச்சியான தருணம் அமைந்து விட்டது.
பிறந்த நாளையட்டி சினேகா தன் கணவர் பிரசன்னாவுடன் நேற்று கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் மனநலம் குன்றிய குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் இல்ல நிர்வாகிகள் அவரை அழைத்து இல்லத்தை சுற்றிக் காட்டினார்கள். வாயால் உணவருந்த முடியாத குழந்தைகளுக்கு டியூப் மூலம் திரவ உணவளிக்கும் ஒரு வார்டுக்கு அவரை அழைத்துச் சென்றானர். அங்கு பல குழந்தைகளுக்கு வாயில் குழாய் மாட்டி உணவளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் இடம் அது. அதைப்பார்த்த சினேகா கதறி அழத்தொடங்கி விட்டார். "இந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணிச்சுங்க. கடவுள் ஏங்க இப்படி இருக்காரு" என்று கதறினார். அருகில் இருந்த பிரசன்னா அவரை தன் தோளோடு அணைத்து ஆறுதல் சொன்னபடியே வெளியே அழைத்து வந்தார். அதற்கு பிறகும் சில நிகழ்ச்சிகள் இருந்தும். அங்கு இருக்க முடியாத சினேகாவை பிரசன்னா காரில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிகழ்ச்சி அந்த இல்லத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.