600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சினிமாவில் டான்சராக தனது பயணத்தை தொடங்கியவர் மன்சூரலிகான். அதன்பிறகு வில்லன், கேரக்டர், காமெடியன் என நடித்து வந்தவர், அவ்வப்போது ஒரு படத்தில் நாயகனாகவும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், ராஜாதிராஜா ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜ் -என நீண்ட தலைப்பு கொண்ட படத்தில்தான் முதலில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு லொள்ளு தாதா பராக் பராக் என சில படங்களில் நடித்தவர் தற்போது அதிரடி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் அவரே தயாரித்து இசையமைத்து, பாடல்கள் எழுதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், சஹானா, மவுமிதா செளத்ரி, காவ்யா, ராதாரவி, கிங்காங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பெப்சி தொழிலாளர்களின் உதவியே இல்லாமல் தனது டாப்சி என்கிற திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களை மட்டுமே வைத்து தயாரித்துள்ளார்.
மேலும், இந்த படம் கமர்சியல் கதையில் உருவாகியிருந்தாலும் தனது டாப்சி அமைப்பின் கொள்கைகளையும் கதையோடு கலந்து வெளிப்படுத்தியிருக்கிறாராம் மன்சூரலிகான். அந்த வகையில், இன்றைய நிலையில் ஒரு படத்தை குறைந்த பட்ஜெட்டில் தரமாக தயாரிப்பது எப்படி என்பதையும் சொல்லியிருக்கிறாராம். அதனால் இந்த படம் புதிதாக படமெடுப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமாம். அதேசமயம், ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக காமெடி, கவர்ச்சி, அதிரடியான சண்டை காட்சிகள் என கலந்து கட்டி அடித்திருக்கிறாராம் மன்சூரலிகான்.