இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகை அனுஷ்கா, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்த ருத்ரமாதேவி திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அனுஷ்காவை மையப்படுத்தி உருவாக்குப்பட்ட இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கோண கண்ணா ரெட்டி கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜுன் பேசும் வசனங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியை தனது மனைவி சினேகா ரெட்டிக்கு அல்லு அர்ஜுன் சமர்ப்பணம் செய்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மகளான சினேகா அல்லு அர்ஜுனுக்கு இப்படத்தின் வசனங்களை பேச உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான் நடிப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் நடிகர் சிரஞ்சீவி என்றும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.