'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரண்மனை படத்தில் ஹன்சிகா பேயாக நடித்ததை அடுத்து, மாயா படத்தில் நயன்தாரா நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது அரண்மனை-2 மற்றும் நாயகி படங்களில் த்ரிஷாவும் பேயாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அரண்மனை-2 படத்தில் அப்படத்தின் முதல் பாகத்தை விட அதிகப்படியான கிராபிக்ஸ் மிரட்டல்களை வைத்திருக்கும் சுந்தர்.சி., பல காட்சிகளில் த்ரிஷாவை ரோப்பில் கட்டி தொங்கவிட்டபடி படமாக்கியிருக்கிறார். அந்த அளவுக்கு த்ரிஷாவின் பேயாட்டம் இந்த படத்தில் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதையடுத்து மாயாவில் நயன்தாரா நடித்தது போன்று நாயகி படத்தில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்த படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படமும் பேய் கதையில்தான் உருவாகிறது. அதோடு, நாயகி படத்துக்காக ஒரு நள்ளிரவு காட்சியை படமாக்கும்போது, பேயாக நடித்த த்ரிஷாவை 7 நாட்கள் வரை ரோப்பில் கட்டி தொங்க விட்டபடி நடிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து அப்படி நடித்ததால் உடம்பு வலியில் துடித்துப்போன த்ரிஷா, 7 நாட்கள் நடித்ததற்கு 7 நாட்கள் படப்பிடிப்புக்கு லீவு போட்டு விட்டு சென்னை வந்து ஓய்வெடுத்தாராம்.