தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகமே நேற்று இரவு முதல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது. 'ஆச்சி' மனோரமா போன்று ஒரு சாதனையாளரை எந்த ஒரு திரையுலகமாவது கண்டிருக்குமா என்பது சந்தேகமே. நேற்று அவரது மறைவுச் செய்தியைக் கேட்டதுமே தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்தில் சீனீயர் நடிகரோ, நடிகையோ மறைந்தால் அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பழக்கம் பலரிடமும் காணப்படுவதில்லை. இன்றைய இளம் நடிகர்கள், நடிகைகள் பலரும் துக்க வீட்டிற்கு செல்வது கூட இல்லை. குறைந்த பட்சம் இரங்கலைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்ன நடந்தாலும் தங்களது படங்களைப் பற்றிய செய்திகளையும், தகவல்களையும் அவர்கள் டுவீட் செய்து கொண்டும், ஃபேஸ்புக்கில் பதிவு செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
அப்துல் கலாம் மறைந்த அன்று இரவு தன்னுடைய பிறந்த நாளை தனுஷ் பார்ட்டி வைத்து கொண்டாடியதும் நடந்தது. அப்போது தனுஷுக்கு அதிகமான கண்டனங்கள் எழுந்தன.
இன்று மனோரமா மறைவுக்கு காலை முதலே அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க நடிகர் ஆர்யா, வழக்கம் போல தான் சைக்கிளிங் சென்று வந்ததன் பெருமையை மகிழ்ச்சிகரமாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு செய்தி உடனுக்குடன் பரவும் நேரத்தில் ஆர்யாவுக்கு ஆச்சி மனோரமாக மறைவு செய்தி இதுவரை சென்று சேராதது ஆச்சரியமளிக்கிறது.
குறைந்த பட்சம் டுவிட்டரிலாவது அவர் மனோரமாக பற்றிய இரங்கலைத் தெரிவித்துவிட்டு அவருடைய சைக்கிளிங் பெருமையைப் பற்றிப் பதிவு செய்திருக்கலாம்.
எந்த ஒரு நட்சத்திர மறைவுக்கும் இன்றைய தலைமுறை நடிகர்கள், நடிகைகள் சிலர் குறைந்த பட்சம் அஞ்சலி கூட செலுத்தாமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது, மனோரமா அவர்களுக்கும் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே சராசரி ரசிகனின் கவலையும் கூட.