விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
விஜய் எதற்காக 'புலி' படத்தில் நடித்தாரோ அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சிலர் திட்டமிட்டு சதி செய்து 'புலி' படத்தின் வசூலைக் குறைத்துவிட்டதாகத்தான் திரையுலகத்தில் சிலர் சொல்கிறார்கள். விஜய் போன்ற மாஸ் ஹீரோவை தொடர்ந்து ஒரே மாதிரியாகத்தான் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது பெரும் தவறு, ரஜினிகாந்த் கூட உச்சத்தில் இருந்த போது 'ராஜா சின்ன ரோஜா' மாதிரியான குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கவரும் படமாக அந்தப் படத்தில் நடித்தார். அது அவருக்கு பல வளரும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. விஜய்யும் 'புலி' படத்தை அதே போன்றதொரு எண்ணத்தில் தான் நடித்துள்ளார். ஆனால், அதைச் சரியான விதத்தில் படக்குழுவினர் மார்க்கெட்டிங் செய்யவில்லை என அனுபவம் வாய்ந்த திரையுலகப் பிரமுகர் நம்மிடம் தெரிவித்தார்.
வழக்கமான பன்ச் டயலாக்குகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என வழக்கமான மசாலாப் படத்தில் விஜய் நடிக்காமல் 'புலி' மாதிரியான படத்தில் நடித்தது நிச்சயம் ஒரு மாற்றமான விஷயம்தான். படத்துக்குப் படம் மாறி மாறி நடிக்கும் போதுதான் ஒரு மாஸ் ஹீரோ நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க முடியும். இருந்தாலும் விஜய் அவருடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் உடனடியாக அடுத்த படத்தை வெளியிட்டு விட்டால் இது போன்ற தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். 'புலி' படம் இப்போது கொண்டாடப்படுகிறதோ இல்லையோ பிற்காலத்தில் நிச்சயம் கொண்டாடப்படும் என்றும் அவர் சொல்கிறார். அவர் பேச்சில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் ?.