ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள குமாரி 21F திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதிய கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்படத்தை பிரபல நடிகை ரேவதி இயக்கவுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் மற்றும் ராஜ் தருண் இப்படத்திற்கான கதை விவாதத்திற்காக பேங்காங் சென்றுள்ளனர். இப்படத்திற்காக பூரி ஜெகன்நாத் கதை மற்றும் வசனங்கள் மட்டுமே எழுதவுள்ளார்.ரேவதியே இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பூரி ஜெகன்நாதே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் லோபர் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.