மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் மய்யம். இதனை எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் விஷ்காம் படித்து வரும் ஆதித்யா பாஸ்கர் இயக்கி உள்ளார். நவீன் சஞ்சய், ஜெய்குஹேனி நடித்துள்ளனர். படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. இந்த படம் ஏடிஎம் குற்றங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளரும் கதாசிரியருமான ஏ.பி.ஸ்ரீதர் கூறியதாவது:
கடந்த சில வருடங்களாகவே ஏடிஎம்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வந்தது. இது எனக்கு கவலை அளித்தது. அதை பற்றி ஆராய்ச்சி செய்தேன். காவல்துறையில் உள்ள நண்பர்களின் உதவியுடன் இதுவரை தமிழ்நாட்டில் பதிவான 70 ஏடிஎம் குற்றங்கள் பற்றி ஆராய்ந்தேன். அதில் 7 கொலைகள் நடந்திருக்கிறது. இதுவரை நடந்த கொள்ளை முயற்சிகளில் யாராலும் ஏடிஎம் பெட்டியை உடைத்து பணத்தை எடுக்க முடிவில்லை. அடுத்தவர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது. தனிமையில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுத்து திருப்புகிறவர்களை அடித்து பணம் பிடுங்குவது நடந்திருக்கிறது.
வெறும் ஆயிரம் ரூபாய்க்காககூட கொலை நடந்திருக்கிறது. கேமராவில் பதிவான பல குற்றவாளிகள்கூட இன்னும் பிடிபடவில்லை. இந்த ஆய்வின் அடிப்படையில்தான் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் என்பது காலத்தின் கட்டாயம் அதை யாரும் தடுக்க முடியாது. அதனை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பதை படம் வலியுறுத்துகிறது. என்றார் ஸ்ரீதர்.