நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். டிவி நடிகையான தீபாவெங்கட்தான் நயன்தாராவுக்காக பின்னணி குரல் கொடுத்து வருகிறார். நயன்தாராவுக்கு தமிழ் நன்றாகப் பேசத் தெரியும். அப்படியும் அவரை யாரும் சொந்தமாக டப்பிங் பேச அழைக்கவில்லையா அல்லது அழைத்து நயன்தாரா மறுத்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரௌடிதான் படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 'மாயா'வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது 'நானும் ரௌடிதான்' படம்தான்.
'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், ''முதன்முறையாக நயன்தாரா தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார், அவரது இந்த முயற்சிக்கு நன்றி என்று நயன்தாராவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 21 அன்று ரிலீசாகிறது.