தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்துள்ள ப்ரூஸ் லீ திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்குமாறு நடிகர் சிரஞ்சீவிக்கு மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ஐஸ் க்ரீம் படங்களை தயாரித்த மூத்த தயாரிப்பாளர் தும்மலாப்பள்ளி ராம சத்ய நாராயணா ப்ரூஸ் லீ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்குமாறு சிரஞ்சீவியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று திரைக்கு வந்த ருத்ரமா தேவி படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் ப்ரூஸ் லீ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இயக்குனர் குணசேகரின் கனவு படமான ருத்ரமாதேவி திரைப்படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வராத நிலையில் குணசேகரே அப்படத்தை தயாரித்தார். மூன்று வருடங்களாக இப்படத்தை உருவாகிய குணசேகர் ரூ.80 கோடியை இப்படத்திற்காக செலவு செய்துள்ளார். போராட்டங்களுக்கு பின்னர் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் ப்ரூஸ் லீ படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சத்ய நாராயணா சிரஞ்சீவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.