ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அரண்மனை படத்தை அடுத்து ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் செளகார் பேட்டை படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராய் லட்சுமி, அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கமிட்டானார். குறிப்பாக, சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே இந்தி சினிமாவில் கோலேச்ச வேண்டும் என்பதுதான் ராய் லட்சுமியின் பெருங்கனவாக இருந்தது வந்தது. அதனால் இந்தியில் அகிரா, ஜூலி-2 என்ற இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் கமிட்டானபோது உற்சாகமாகி விட்டார். அதோடு, இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் அசினுக்கு கொடுத்த என்ட்ரி போன்று அவர் தனக்கு அகிரா படத்தில் கொடுத்துள்ள பாலிவுட் என்ட்ரியும் தன்னை அங்கு பிரபல நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார் ராய் லட்சுமி.
அதனால், கைவசம் தமிழ், தெலுங்கு படங்கள் இருந்தபோதும் அவற்றை பெரிதாக நினைக்காமல், மும்பையில் முகாமிட்டுள்ளார் ராய்லட்சுமி. அதோடு, ஜூலி-2 என்ற இந்தி படத்தில் பாலிவுட் கவர்ச்சி புயல்களுக்கு இணையான கவர்ச்சியை வெளிப்படுத்தும் அவர், ஒரு காட்சியில் நீச்சல் உடையணிந்தும் கலக்குகிறாராம். அதனால் இந்த படம் தனக்கு இந்தி சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை பிடித்துத்தரப்போவது நிச்சயம் என்று கூறிவரும் ராய்லட்சுமி, மும்பையில் இருந்தபடியே புதிய படங்களை கைப்பற்றும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்.