பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சரத்குமார் அணியும், விஷால் அணியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தான் ஊழல் செய்திருப்பதாக பொய்யான பிரச்சாரம் செய்து ஆதாரமில்லாத அவதூறுகளை நடிகர் விஷால் பரப்பி விட்டு வருவதாக அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார் சரத்குமார்.
இந்த கிரிமினல் வழக்கு குறித்து விஷால் பதிலளிக்கையில், நடிகர் சங்க கட்டிடம் அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் அனுமதி கேட்காமலேயே இடிக்கப்பட்டுள்ளது. அதோடு சில வருடங்களாக வருமான வரியே கட்டவில்லை. இதுபோன்ற பல குற்றங்கள் நடந்துள்ளது. இப்போது அவர் மீது நான்அவதூறு பரப்புவதாக என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் அடுத்து இந்த குற்றங்களை நிரூபிப்பதற்காக அவர் மீது நான் வழக்குத் தொடரப்போகிறேன் என்று கூறியுள்ளார் விஷால்.
ஆக, நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அடுத்தபடியாக வழக்கு, நீதிமன்றம் என இன்னொரு பரபரப்பையும் சரத்குமார், விஷால் அணியினர் ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சினைகள் எப்போது முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.