பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொள்கிறார். டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறுகதைகளைத் திறனாய்வு செய்து பேசுகிறார்கள். கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், வெங்கடேஷ், தியாகராஜா, தமிழரசு, வேலு, ராஜசேகர், மாந்துறை ஜெயராமன், செல்லத்துரை, கணேஷ் பாபு ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி வைரமுத்து கூறியிருப்பதாவது: ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன். என் முன்னோடிகளால் எழுதப்படாத மிச்சத்தையும், அவர்களால் வாழப்படாத வாழ்க்கையையும் என் சிறுகதைகளில் நான் கலைப்படுத்தியிருக்கிறேன். இது பத்து மாதங்களில் எழுதப்பட்டதுதான்; ஆனால் இதை எழுதுவதற்குக் காலம் என்னை 60 ஆண்டுகள் தயாரித்திருக்கிறது. இதில் புத்தரையும் எழுதியிருக்கிறேன்; கசாப்புக் கடைக்காரனையும் எழுதியிருக்கிறேன். வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது இலக்கியம் பூப்பறித்துக் கொண்டிருக்கமுடியாது. அதனால் எரியும் பிரச்சனைகளும் எழுதப்பட்டுள்ளன. கவுரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கை இனப்படுகொலை வரை எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு சிறுகதையையும் பத்துமுதல் பன்னிரண்டுமுறை திருத்தியிருக்கிறேன்; வார்த்தைகளைத் தங்க நாணயம்போல் செலவழித்திருக்கிறேன்” என்கிறார் வைரமுத்து.