தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போகிறபோக்கைப் பார்த்தால்... படத்துக்கு பூஜைபோடுவதற்கு முன்பே படத்தின் தலைப்பை அறிவித்த காலம் எல்லாம் வழக்கொழிந்துபோய்விடும் போலிருக்கிறது. சமீபகாலமாக படம் முடிவடையும்வரை படத்தின் தலைப்பை அறிவிக்காமல் ரகசியம் காக்கிறார்கள். அதன் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தலாம் என்று எண்ணுகின்றனர். இன்னொரு பக்கம், தலைப்பை முன்னரே அறிவித்தால் யாராவது இது என்னுடைய தலைப்பு என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து டார்ச்சர் பண்ணிவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவும் இப்படி செய்கிறார்கள்.
குறிப்பாக அஜித் நடித்த படங்களின் தலைப்புகளை கடைசி நேரத்தில் அறிவிப்பதற்கு காரணமே இந்த கோர்ட் சமாச்சாரம்தான். விஜய் நடித்த துப்பாக்கி உட்பட சில படங்களின் தலைப்பு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் சிலர். அதன் காரணமாக சம்மந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஹீரோக்கள் சிரமத்துக்குள்ளானார்கள். இதை எல்லாம் கவனித்து வந்த அஜித் அதன் பிறகே இனி தன் படங்களின் தலைப்பை முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தாராம். ஆரம்பம் படம் தொடங்கி வேதாளம் வரை அஜித்தின் எண்ணத்தின்படியே கடைசி நேரத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.