ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீரம் சிவா இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வேதாளம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில தினங்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த ஃபர்ஸ்ட்லுக்கிலேயே தீபாவளி வெளியீடு என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த மாதம் 10 ஆம் தேதி தீபாவளி, இன்றிலிருந்து தீபாவளிக்கு சரியாக 30 நாட்களே உள்ளன. இதை இசையமைப்பாளர் அனிருத் உணராமல் அலட்சியமாக இருக்கிறார் என்று வேதாளம் படக்குழுவினரிடமிருந்து முணுமுணுப்பு கேட்கிறது.
வேதாளம் படத்திற்கு இன்னும் இரண்டு பாடல்களை கொடுக்காமலே இருக்கிறாராம். கடந்த ஒரு மாதமாக இயக்குநர் சிவா அவரை துரத்திக் கொண்டிருக்கிறார். இன்று நாளை என இழுத்துக் கொண்டே இருக்கிறார்களாம். பாடல் தராமல் அனிருத் தாமதம் செய்து வருதால் வேதாளம் படக்குழுவினரை பயம் கவ்வ ஆரம்பித்துள்ளதாம். அதாவது இரண்டு பாடலுக்கே இப்படி இழுத்தடிப்பவர் படத்திற்கு பின்னணி இசையமைக்க எப்படி எல்லாம் இழுத்தடிப்பாரோ என்பதுதான் அவர்களின் பயம். இந்த தகவல் அஜித் காதுக்குப் போனபோது வருத்ப்பட்டதாக தகவல். கஷ்டப்படாமல் கிடைத்ததாலோ என்னவோ வெற்றியின் அருமை அனிருத்துக்கு தெரியவில்லை போலிருக்கிறது.