மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள சிங் இஸ் பிலிங் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இது வரை 68 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி, படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி யார்தியை சிங் இஸ் பிலிங் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
இது பற்றி அஸ்வினி யார்தி கூறுகையில், சிங் இஸ் பிலிங் படத்தில் ரப்தார் சிங்கின் கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் தொடர்ச்சியை எடுக்க நினைத்துள்ளேன். இதற்காக நல்ல கதை மற்றும் கேரக்டர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளோம் என்றார். ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கியிருந்தார்.