பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வரும் அவர், அரசியலிலும் பிரவேசித்து வந்தார். தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அந்தவகையில், அடிக்கடி அரசியல் பரபரப்பிலும் சிக்கிக்கொண்டு வருகிறார் ரோஜா.
இந்தநிலையில், ப்ரியம், பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கெளரி, தேடினேன் வந்தது. புதுக்குடித்தனம் என பல படங்களில் நடித்த மந்த்ரா, பின்னர் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று தனது சொந்த ஊரான ஆந்திராவில் குடியேறினார். திருமணத்திற்கு பிறகு தமிழில் ஒன்பதுல குரு என்ற படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்த மந்த்ராவுக்கும் இப்போது அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளதாம்.
விளைவு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆசீர்வாதம் பெற செல்லும் மந்த்ரா, இந்த முறை சென்றபோது தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதையடுத்து விரைவில் அவரை கட்சியில் முறைப்படி சேர்த்துக்கொள்ளும் வேலைகள் நடக்கிறதாம். இதனால் இதுவரை ஒய்எஸ்ஆர் காங்கிரசில் ரோஜா என்ற நடிகை மட்டுமே இருந்தநிலையில், இப்போது புதிதாக மந்த்ராவும் என்ட்ரி கொடுக்கயிருப்பதால் இவருக்கு கட்சியில் மவுசு கூடியுள்ளதாம். இதையடுத்து ரோஜாவின் ஆதரவாளர்கள் மந்த்ராவின் வரவை எதிர்க்கத் தொடங்கியிருப்பதால், மேற்படி நடிகைகளால் உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறதாம்.