பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்திற்காக பிரபாஸ் இரண்டரை ஆண்டுகள் தனது கடின உழைப்பை கொடுத்தது போன்று ராணி ருத்ரமாதேவி படத்திற்காக அனுஷ்காவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடினமாக உழைத்திருக்கிறார். வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரை ஏற்றம் என வியர்வை சிந்தி மட்டுமின்றி ரத்தம் சிந்தியும் நடித்துள்ளார். அந்தவகையில், அனுஷ்காவைப் பார்த்து இந்திய திரையுலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் வியப்பில் உள்ளனர்.
அதோடு, அந்த படத்திற்காக 3 கிலோ தங்கை நகைகளை தனது உடம்பில் அணிந்து கொண்டு நடித்தார் அனுஷ்கா. அரசர் காலத்து காஸ்டியும் அணிந்து கொண்டு அந்த நகைகளை அணிந்தபடி வாள் ஏந்தி அவர் சண்டை செய்திருக்கிறார். தனது உடம்பில் அணிந்துள்ள நடிகைகள் உடன் நடிப்பவர்களின் உடம்பில் கீறி காயப்படுத்தி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டு நடித்துள்ளார் அனுஷ்கா.
இப்படி அனுஷ்காவின் கடின உழைப்பின் பலனாக உருவான ராணி ருத்ரம்மா தேவி படம் இன்று ஆந்திராவில் பரபரப்பாக வெளியாகிறது. இதுவரை அனுஷ்கா படங்கள் இல்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கும் பாகுபலிக்கு இணையான வரவேற்பு இருப்பதால், கடந்த 3-ந்தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையிடப்பட்ட விஜய்யின் புலி படத்தை பல முக்கிய தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டு ராணி ருத்ரம்மா தேவி படத்தை திரையிடுகிறார்களாம். இதனால் புலி படத்தை ஆந்திராவில் திரையிடும் உரிமையை வாங்கியவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.