தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்கம் தேர்தல் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. விஷாலின் பாண்டவர் அணியினர் தமிழகம் முழுக்க நாடக நடிகர்களிடம் ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் வடிவேலு. அப்போது அவர் பேசும்போது... நடிகர் சங்கம் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிப்பது இப்போது தான் முதல் வேலை. இந்த தேர்தலும் அதற்காகத்தான்.
எதிரணியனருக்கு பயம் வந்துவிட்டது, அதனால் தான் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றனர். நேற்று ராதிகா பேசும்போது விஷாலை பார்த்து விஷால் ரெட்டி விஷால் ரெட்டி என்று குறிப்பிடுகிறார். எதற்காக ஜாதியை சொல்லி குறிப்பிட வேண்டும். நடிகர்களுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது. ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவரை ரஜினிகாந்த் ராவ் என்று சொல்வார்களா...?
தம்பி சிம்பு நேற்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். அவர் பேசவில்லை, அவரை அப்படடி பேச தூண்டிவிட்டுள்ளனர். அவர் அப்படி பேசியது தவறு தான். எதிரணியினர் நாடக, நடிகர்களை ஒருபோதும் மதித்தது கிடையாது. பாண்டவர் கண்டிப்பாக நன்மை செய்யும். எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கண்டிப்பாக இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று களவு போன நடிகர் சங்க கட்டடத்தை மீட்போம் என்றார்.
மேலும் வடிவேலுவிடம், நடிகர் சங்க தேர்தலில் பிரச்சாரம் செய்வது போன்று வருகின்றன சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்காவது பிரச்சாரம் செய்வீர்களா..? என்று கேட்டபோது, நிச்சயமாக கிடையாது, அந்தமாதிரி எண்ணம் எதுவும் எனக்கு கிடையாது, மேலும் நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை, கடந்தமுறை எதற்காக பிரச்சாரம் செய்தேன் என்று எல்லோருக்கும் தெரியும் என்றார்.