'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
நடிகர் சங்க தேர்தலில் எங்களது ஆதரவு விஷால் அணிக்கு என்றும், கலை குடும்பத்தை விஷால் பிரிக்கவில்லை என்றும் மறைந்த லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் திருஉருவ படத்திறப்பு விழா சென்னையில் வருகிற அக்.,12ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. எஸ்எஸ்ஆர்., வாரிசுகள் இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதுதொடர்பாக அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர குமார்...
அப்பாவுக்கு நினைவிடம் அமைக்க 2 மாத காலமாக முயற்சித்து வருகிறோம். மதுரை அருகே உள்ள சேடப்பட்டி கிராமத்தில் அப்பாவுக்கு மணிமண்டபம் கட்ட ஆசை. வருகிற 12ம் தேதி அமாவாசை என்பதால் அந்தநாளில் அப்பாவின் திருஉருவ படத்தை திறக்க உள்ளோம். 24ம் தேதி மதுரை சேடப்பட்டியில் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனது மகன் பங்கஜ் குமாரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார், அவர் பாண்டவர் அணிக்கு ஆதரவாக உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் விஷயம் அறிந்து விஷாலின் பாண்டவர் அணியினர் இந்த விழாவை சிறப்பாக செய்யணும் என்று அவர்களாகவே முன்வந்தனர். மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை.
பாண்டவர் அணியினர் யாரோ ஒருவரை மேடையில் பேச வைக்கின்றனர் என்று ராதிகா கூறுவதை ஏற்க முடியாது. நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை, அதற்கு காரணம் எனது அப்பா தான். அவர் தலைவராக இருந்தபோது என்னை உறுப்பினராக அவர் சேர்த்து கொள்ளவில்லை. ராதிகாவும், எனது அம்மாவும் நெருங்கிய தோழிகள். எம்ஆர் ராதா குடும்பம் போன்று எங்களது குடும்பமும் கலை குடும்பம் தான்.
லட்சிய நடிகரின் மகனை யாரோ ஒருவர் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. அரசியல் வேண்டாம் என்று பேசும் நீங்களே அரசியல் பண்ணாதீர்கள். இந்த விழாவுக்கு நீங்களும் வாருங்கள்(சரத்குமார் அணி), இந்த மேடையை நீங்களும் பயன்படுத்தி கொள்ளுங்கள். எதுவும் சந்தேகம் என்றால் என்னிடம் போனில் பேசுங்கள், தவறாக மீடியாக்களில் செய்தி வெளியிட வேண்டாம்.
கலை குடும்பத்தை விஷால் பிரித்துவிட்டார் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. எதையாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காக மீடியாவில் வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள். எஸ்எஸ்ஆர் எல்லோருக்கும் பொதுவானவர், அவரை வைத்து அரசியலாக்காதீர்கள்.
எனது அப்பா சாலிகிராமத்தில் 19 கிரவுண்ட்டில் தியேட்டர் வைத்திருந்தார். அப்பா உயிரோடு இருந்தபோது 40 சதவீதம் கொடுங்கள் ஒரு பெரிய தியேட்டர் கட்டி தருகிறோம் என ஒரு பில்டர் கேட்டார். அப்போது எனது அப்பா சொன்னார் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த தியேட்டரை எப்படி இன்னொருவருக்கு கொடுக்க முடியும் என்றார். அதே கேள்வியை தான் நடிகர் சங்க கட்டடம் விஷயத்தில் இப்போது சரத்குமார் - ராதாரவியிடம் கேட்கிறேன்.
புரட்சி தலைவரும், எனது அப்பாவும் மடிப்பிச்சை ஏந்தி சிவாஜி காலத்தில் கட்டடம் கட்டினார்கள். இப்படி நடிகர் சங்க கட்டடத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. அதை நீங்கள் எப்படி தவறான செய்தியை பரப்புவீர்கள். எங்களுடைய முழு ஆதரவும் பாண்டவர் அணிக்கு தான். அவர்கள் சொல்லும் கருத்து எங்களுக்கு பிடித்திருக்கிறது.
இவ்வாறு ராஜேந்திர குமார் கூறினார்.