'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் அற்புதமான காதல் ஜோடியை பார்த்ததாக பிருத்விராஜையும் பார்வதியையும் கொண்டாடி தீர்க்கிறது கேரளா.. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படம் கடந்த 19 நாட்களில் கேரளாவில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அதன் சாட்சி தான்... இந்தப்படத்தில் நடித்த சில நடிகர்கள் பார்வதியை பாராட்டித்தள்ள, அவரோ பிருத்விராஜின் நடிப்பு மற்றும் திறமையை பார்த்து வியந்துபோய் நிற்கிறார். பிருத்விராஜ் வருங்கலாத்தில் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக வருவார் என்றும் ஆருடம் கூறியுள்ளார் பார்வதி.
“மலையாளத்தில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களில் பிருத்விராஜ் முக்கியமானவர்.. அவருடன் நடிக்கும்போது ரொம்ப ஈசியாக உணர்ந்தேன்.. நம் பக்கம் உள்ள தவறுகளை தனது கண்களாலேயே சுட்டிக்காட்டும் வரம் அவருக்கு கிடைத்து இருக்கிறது. அதுமட்டுமல்ல சினிமாவில் எந்த ஏரியாவை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம்.. அந்த அளவுக்கு விரல் நுனியில் துல்லியமாக விஷயங்களை வைத்திருக்கிறார். அவரது திறமைக்கு அவர் ஏற்கனவே இயக்குனராகி இருந்திருக்க வேண்டும்.. அதனால் என்ன, எதிர்காலத்தில் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக வருவார்.. அருமையான படைப்பை தருவார் என்பது மட்டும் உறுதி” என பிருத்விராஜுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் பார்வதி.